Posts

Showing posts from November, 2012

மாமன்னன் முதலாம் ராசேந்திரச் சோழன்

Image
          இந்தியாவை ஆண்ட மன்னர்களில், தமிழ் மன்னர்களுக்குத் தனிப் பெருமை உண்டு. இந்தியாவைத் தாண்டிய நாடுகளையும் வென்றுத் தங்களது செங்கோலின் கீழ் கொண்டு வந்தவர்கள். அதிலும் ராசேந்திரச் சோழன் பராக்கிரமம் அதிகம் மிக்கவர் என்று அறிய முடிகிறது. அவரது கப்பற்படை வலிமை மிக்கதாக விளங்கி இருக்கிறது. அதனைக் கொண்டு பல தீவுகளையும், இலங்கை முழுவதையும் வென்ற அவர் கங்கைச் சமவெளி வரை தனது தீரத்தை நிலை நிறுத்தி இருக்கிறார். இம்மன்னரது தளபதியாக இருந்த அரையன் ராஜாதிராஜன் என்பவரதுப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பல மன்னர்களது உறக்கம் கெடும் எனப் படித்தது உண்டு.        அவரைப் பற்றி திரு அகிலன் அவர்களால் எழுதப்பட்ட “வேங்கையின் மைந்தன்” நாவல் சாகித்திய அகாதெமியின் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப் பட்டிருக்கிறது. வேங்கை எனக் குறிப்பிடப்படுபவர் மாமன்னன் ராஜராஜ சோழன். ராசேந்திரச் சோழன் கங்கை வரைப் படை எடுத்த சம காலத்தில், வட இந்தியாவை ஆக்கிரமித்த முகலாய மன்னனும் (முகம்மது கோரி?), ராசேந்திரச் சோழனும் போர்க்களத்தில் சந்தித்திருந்தால், இந்தியாவின் வரலாற்றில் முகலாயர்களுக்கு இடம் இல்லாமல் போயிருந்திருக்கலாம்

விவசாயமும் புதுமைகளும்

           இந்தப் பதிவு சில வாரங்களுக்கு முன்பே எழுதத் திட்டமிடப்பட்ட ஒன்று. ஆனால் தண்ணீர் இல்லாமல் தமிழ்   நாடேத் தவித்துக் கொண்டிருக்கையில் எழுதுவது சற்று முரணானது என நினைத்ததால் வடகிழக்குப் பருவமழை துவங்கி விட்டிருக்கும் இந்த நேரத்தில் மகிழ்வுடன் இந்தப் பதிவு..., நீர்ப் பாசனம் :                  விவசாயம் செய்வதில் தற்போது காண்கிறப் புதுமைகள் வேலைகளைச் சுலபமாக்கி உள்ளன. உதாரணமாகச் சில விசயங்களைச் சொல்லலாம். முன்பெல்லாம் மும்முனை மின்சாரம் எப்போது வரும் என்றுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிகாலையில் இருட்டிலேயே நிலத்திற்குச் சென்று நீர் இறைப்பதுண்டு. ஆனால் தற்போது condenser   என்ற உபகரணம் மூலம் இருமுனை மின்சாரம் இருக்கும்போதும் மோட்டாரை இயக்க முடிகிறது. ( இது சட்ட விரோதமா எனத் தெரியவில்லை. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு இருமுனை மின்சாரம் கூட இருப்பது இல்லை ) .                  டீசல் நீரிரைப்பு இயந்திரம் பயன்படுத்துவோற்கும் எண்ணை விலை பயமுறுத்தும் விசயமாகவே உள்ளது. இந்த மாற்று முறைகள் கிணற்றுப் பாசனம் கொண்ட விவசாயிகளுக்கு மட்டும்தான். ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்ப