Posts

Showing posts with the label இந்திய தேசிய ராணுவம்

நேதாஜி யாரெனில் 2 /2.

Image
சிப்பாய் கலகம் என அழைக்கப் பட்ட முதல் சுதந்திரப் போர் (1857)         நமது இந்தியப் படை வீரர்கள் 1857 ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்கள். அது கடைசியில் ஒடுக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது. தோல்விக்கான காரணங்கள் 1. சரியான தலைவன் இல்லாமை, அதனால் முறையான திட்டமிடல் இல்லை. பகதூர் ஷா தயக்கத்துடனே தலைமையை ஒப்புக் கொண்டார். 2. ஆயுதங்கள் இல்லை, ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களேப் பயன்படுத்தப் பட்டன. 3. தகவல் தொடர்பு இல்லை, எனவே சப்பாத்தி மூலம் ரகசியமாக செய்தி அனுப்பப்பட்டன. ஆங்கிலேயர்கள் தந்தி மற்றும் ரயில் அகியவற்றைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை எளிதில் முறியடித்தார்கள். 4. இந்தியர் என்கிற எண்ணம் உருவாகி இருக்க வில்லை. இது போன்ற பின்னடைவுகள் இல்லாமல் இருந்திருந்தால், நாம் 1857 லேயே ஆங்கிலேயர்களை விரட்டியிருக்க முடியும். INA war Trial & Royal Indian Navy Mutiny (February 1946) :         நேதாஜி இந்த எல்லாக் குறைகளையும் களைந்து இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இருந்தார். இந்த ராணுவம், வட கிழக்குப்...

நேதாஜி யாரெனில் - 1 / 2

Image
நேதாஜி யாரெனில்            நேதாஜியைப் பற்றித் தெரியாதா என்ன? நேதாஜி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காந்திஜியின் கொள்கைகளோடு முரண்பாடு கொண்டவர். முத்துராமலிங்கத் தேவருடன் நட்பு கொண்டவர். INA வை உருவாக்கப் பெரிதும் தெற்காசியாவில் வாழ்ந்தத் தமிழர்களே உதவியதால், “மறுபிறவி என்று ஒன்று இருந்தால், நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தவர். இவ்வாறாகவெல்லாம் நமக்கு தெரிந்தவர் நேதாஜி.             ஆனால் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது யார், எந்த வழியில் என்றால், அது நிச்சயமாக நேதாஜிதான், ஆயுதப் போராட்ட வழியில்தான். அஹிம்சையைப் பார்த்து அச்சம் கொள்பவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. மாறாக, ஒரு வெள்ளை அதிகாரி சொன்ன வாசகம் என்னவென்றால் “ இந்தியாவில், பிரிட்டீஷாருக்கு இருக்கும் ஒரு பெரிய போலீஸ்காரர் காந்தி, மக்கள் எழுச்சியால் நிலைமைக் கட்டுக்கடங்காமல் போகும்போதெல்லாம் அதைக் காந்தியைக் கொண்டே, ப்ரிட்டிஷ்காரர்கள் அடக்கினர்” என்றார். இந்தியாவில் ராபர்ட் கிளைவ் கால் வைக்கும் சமயத்தில், வெள்ளையர்கள், அமெரிக்காவிலிருந்து தோல்வி கண்...