Posts

Showing posts from January, 2011

எங்க ஊரு பாளையம்

Image
           தமிழ்நாட்டுல ஏகப்பட்டப் பாளையங்கள் இருக்கு. பாளையமுன்னு சொன்ன வுடனே தெரிஞ்சிக்கற மாதிரி எங்க ஊருப் பெத்தநாயக்கன் பாளையம், புத்திரக் கவுண்டன் பாளையம், கோபிசெட்டிப் பாளையம்  மாதிரிப் பெரிய பாளையம் எல்லாம் இல்லை.      சிங்கம் மாதிரி சிங்கிளா (தனித்தன்மயோடப்) பாளையம். இப்பத்தைக்கு "வெறும்" பாளையமுன்னு வச்சுக்கிடுவோம்.  ஊரை  விட்டு வெளிய வந்து மொத்தமா ஒன்பது வருசமாச்சு. எனக்கு சொந்த ஊரிலேயே  வேலை கிடைக்கனும்கிரதுக்காக, எங்க ஊரப் பக்கம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டறதுக்கேல்லாம் எங்க ஊரு அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை. அவருக்கெல்லாம் பல சோலி இருக்குன்னு உங்க எல்லாருக்குமேத் தெரியும்.                எங்க ஊரும் ஒரு முன்னாள் கிராமம். (Ex Village ). கிராமத்தோட எல்லா அடையாளங்களையும் கொஞ்சம் வேகமாத் தொலைச்சுக்கிட்டு வர்ற ஊரு. எங்கா ஊருப் பெரிசுகளுக்கு எல்லாம் பேரே விசித்திரமா இருக்கும்.புளுவன், காக்காயன், புட்டன், மண்ணுத்தின்னி, வைக்கக் கட்டி,காசிகரயான், குண்டுணி, பொரி உருண்ட,  குஞ்சு + (சாதிப்பெயர்),   , அவிங்க சொந்தப் பேரச் சொன்னாக்க ஒருத்தருக்கும் தெரியாது.  அதோட, அவுல