Posts

Showing posts from October, 2013

வானம் வழங்குமெனில்..!!

  சில பேச்சாளர்களுக்கு, பலரையும் வசீகரிக்கும் சக்தி உண்டு, அவர்களால் தங்களதுப் பேச்சின் மூலம் பல சமுதாய மாற்றத்தை உண்டு செய்ய முடியும். சிலருக்கு பேசியே பலரை ஏமாற்றும் திறமை உண்டு. மனிதர்கள் சூழ்நிலை மற்றும் தேவைக்கு ஏற்பத் தங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளும் தன்மைக் கொண்டவர்கள்.  ஒருவரின் பேச்சை வைத்து நல்லவர், தீயவர் என முடிவெடுப்பது கடினம்.    ஒரு சமயம், பக்கத்து வயலைச் சேர்ந்த ஒரு பெரியவருடன் சேர்ந்து மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்ட்த்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தோம். அங்கு எங்களது வயலுக்கு நீர்ப் பாசனம் தரும் ஏரியின் மதகு புதுப்பிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டி, கோரிக்கை மனு ஒன்றைத் தருவதாக ஏற்பாடு. அந்தப் பணியை குத்தகை எடுத்தவர் ஒரு விவசாயி. பல சங்கத்துப் பிரதிநிதிகளும் பலக் குறைகளை ஆட்சியரிடம் முன் வைத்தார்கள். ஆட்சியரும் கவனமாகக் கேட்டுக் கொண்டு, நிவாரணங்களை கூறிக் கொண்டிருந்தார்.   எங்களது ஏரியின் மதகுப் புதுப்பிக்கும் பணியைக் குத்தகை எடுத்திருந்த குத்தகைதாரரும், ஒருப் பிரதிநிதியாக விவசாயிகளின் பல்வேறு இன்னல்களைப் பற்றிப் பேசி, அவற்றை களைய ஆட்சியர

சமூக மாற்றங்கள் .....

      தலைமுறை மாற்றம் (இடைவெளி என்றும் கூறுவதுண்டு) என்பது, ஒரு தலைமுறையில் வாழ்ந்த மக்களுக்கும், அவர்களுக்குப் பின்வருகிற (ஒரு 20-30 வயது இளைய) மக்களுக்கும் உள்ளப் பழக்க வழக்க மாறுபாடுகளைக் குறிக்கும். தற்போதைய சூழ்நிலையில் இந்த கால இடைவெளியின் அளவுக் குறைந்து விட்டது. 5 லிருந்து 10 ஆண்டுகள் இளையவரிடமே இந்த தலைமுறை மாற்றத்தைக் காண முடிகிறது. 1.        எங்களது கிராமங்களில், 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அருகிலுள்ள நகரத்திற்கு செல்ல, காலை 7.45 ற்கு வரும் தனியார் பேருந்தைத் தவற விட்டால், அடுத்து எத்தனைப் பேருந்துகள் வந்தாலும், நாம் படியை விட்டு மேலே ஏற இடம் இருக்காது (ஒருவேளைப் பேருந்தை பயணிகளுக்காக நிறுத்தினால்). ஆனால் சிற்றுந்து ( mini bus)   வந்தப் பின், அந்தப் பிரச்சினை குறைந்தது. யாரும் பேருந்தின் கூரை மீது ஏறுவது இல்லை என்றானது. அந்த நிலை இன்னும் முன்னேறி.., தற்போது பொதுப் போக்குவரத்தையேப் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை என்றாகி விட்டது. 2.        ஒருவர் வீட்டில் தொலைப்பேசி வைத்திருக்கிறார்கள் அல்லது, TV Antenna  இருக்கிறது என்று சொன்னால், அவர்களது வீட்டில் யாராவது வெ