நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2


  சில வழக்குகளுக்காக நீதி மன்றத்தில் கடந்த 10 வருடங்களாக அலைய நேரிட்டது. படிக்காத எதிரிகள் கூட நியாயமாக இருந்த நம்மிடம், சவால் விட்டுப் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றினார்கள். இது எப்படி நடக்கிறது? நமது நாட்டில் சட்டம் சரியில்லை என்று நினைத்துக் கொண்டோம்.

ஆனால் அது உண்மையில்லை, வழக்குரைஞர்கள்தாம் நம்மை அலைக்கழிக்கிறார்கள் என தாமதமாகவேப் புரிந்தது.

வழக்குரைஞர்களின் சூழ்ச்சிகள் :


  • இவர்கள் நவீன நாட்டாமைகள். 95%வழக்குரைஞர்கள் எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரகசியமாக உடன்படுகிறார்கள்.
  •   அதிக வாய்தா வாங்கினால் அதிக பீஸ் கிடைக்கும். தன் தரப்புவாதி தோல்வியுற்றால் அப்பீல் கேஸ் போனசாக கிடைக்கும் என்கிற போது நியாயமாக எப்படி இருப்பார்கள்?.

  • அவனையெல்லாம் வெட்டிப் போட்டுவிட்டு என்னிடம் வா, உன் சொத்து மொத்தமும் நான் பார்(பறி)த்துக் கொள்கிறேன் என்று வெறியைத் தூண்டி, சாதாரண சிவில் கேஸை, கிரிமினல் கேஸாக்கி அதைப் பீஸாக்கி பணம் பார்த்து விடுவார்கள்.
  • நம் தரப்பில் உள்ள, சரியான சாட்சியை, ஆவணத்தை எக்காரணம் கொண்டும் வாதுரையில் எழுதவே மாட்டார்கள். மாறாக, நாம் எழுதச் சொன்னால் வழக்கு தோற்று விடும் என்று பயமுறுத்துவார்கள். அப்போதுதான் வழக்கு நீண்ட காலம் நடக்கும்.
  • இரண்டு தரப்பு வழக்குரைஞரும் பேசி வைத்துக் கொண்டு, மாதம் ஒரு Affidavit தாக்கல் செய்து பணம் பறிப்பார்கள். பதில் கொடுக்க, பதிலுக்கு பதில் கொடுக்க என அனைத்திற்கும் பணம். பணத்திற்கு ரசீது கேட்டுப் பாருங்கள்? தரமாட்டார்கள். காசோலை அல்லது இணைய பரிவர்த்தனையில் தருகிறேன் என்று சொல்லுங்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
  • தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள கட்டணம் மட்டும்தான் தருவேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேபோல், வழக்குக்கான மொத்தக் கட்டணத்தையும் முதலிலேயே தெரிவித்துவிட வேண்டும், இடையில் எக்காரணம் கொண்டும் பணமே கேட்கக் கூடாது என்று சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்.

  • காவல் நிலையத்திற்கு கப்பம் தருவதற்கு 3000ரூ, தன்னுடைய பீஸ் 1000ரூ என்று வாங்கிக் கொள்வார்கள். இதில் உண்மையில் காவல் துறை(ரை)க்கு எவ்வளவு தருவார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். 
  • பார் கவுன்சில் விதிகளின் படி, வழக்கின் பணப் பலனைப் பொறுத்து சதவீதத்தில் தனக்கான கட்டணத்தை அநியாயமாக வாங்கக் கூடாது. பெரும்பாலானோர் அதைப் பின்பற்றுவது இல்லை. 
  • வழக்கில் பாதகமான சங்கதிகளைப் பெரிதுபடுத்திக்கூறி, நாம் தோற்பது உறுதி என்கிற அளவுக்கு விரக்தியிலேயே நம்மை வைத்திருப்பார்கள். வழக்கு கிடைக்கும் வரை வேறு விதமாகவும், வக்காலத்து தாக்கல் செய்தபின் வேறு விதமாகவும் பேசுவார்கள். அன்றைய வாய்தாவில் என்ன நடந்தது, அடுத்தது என்ன? என வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். Ecourts, இணைய தளத்தில், வழக்கு எண், மற்றும் நீதிமன்றம் எது என்பதைக் கொண்டு நாமே பார்த்துக் கொள்ள முடியும் என்பதையும் சொல்ல மாட்டார்கள். 
  • நாம் சட்ட விரோதமாக, அநீதியாக எந்த செயலும் செய்யவில்லை என்றால், எந்த நீதி மன்றத்தைப் பார்த்தும் பயப்பட வேண்டியது இல்லை. இந்த உண்மையைக் கூறாமல், நீதிமன்றத்தின் மீது நமக்குள்ள அறியாமையைப் பெரிதுபடுத்தி, அச்சமூட்டுவார்கள்.
  • எல்லா விதிகளையும் தங்களுக்கு சாதகமாகவே வை(வளை)த்துக் கொண்டு, சட்டம் தெரியாத மக்களை ஏமாற்றி ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக பணம் சம்பாதித்துக் கொள்ளும் திருட்டுக் கூட்டாளிகள்தான் காவல் துறையும், வழக்குரைஞர்களும். ஆனால், தங்களைப் போல் நேர்மையானவர்கள் உலகத்திலேயே யாரும் கிடையாது என்று துண்டைப் போட்டுத் தாண்டுவார்கள். 

எனவே,  நமக்கு நாமே வாதாடுவதுதான் சிறந்தது. எளிதில் நியாயமான தீர்வைத் தரக்கூடியது.

எல்லா சட்டப் புத்தகங்களையும் படிக்க வேண்டுமா?:

நாம் செய்ய வேண்டியது எல்லாம், சில அடிப்படை சட்டங்களைத் தெரிந்து கொள்வது. அதற்கான புத்தகங்களைப் படித்துக் கொள்வது. ஆங்கிலம் தெரிந்தவராக இருந்தால், மத்திய அரசின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அவற்றுள் முக்கியமானவை, உரிமையியல் விசாரணை நடைமுறை சட்டம் Civil Procedure code, இந்திய சாட்சிய சட்டம் Indian Evidence act, இந்திய தண்டனைச் சட்டம் Indian penal code, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் Criminal Procedure code ஆகியவை. மேலும், உங்கள் வழக்குக்கு தேவையான குறிப்பிட்ட சட்டத்தின் அவசியமான சாராம்சங்கள் தெரிந்து கொள்வது அவசியம். இவற்றில் உங்கள் வழக்கிற்கு தேவையானவற்றை மட்டும் விளங்கிக் கொண்டால் போதுமானது. உரிமையியல் வழக்கை சந்திப்பவர்கள், குற்றவியல் சட்டம் படித்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. எதையுமே மனப்பாடம் செய்யவேண்டிய தேவை இல்லை. இவற்றைப் படிப்பதற்கு, புரிந்து படித்தால் ஒரு மாதம் அல்லது அதிக பட்சம் மூன்று மாதங்கள் போதும்.


வழக்காடுவது எப்படி? :

வழக்குரைஞர்கள் சட்டம் விதி 32, உவிமுச கட்டளை 3 ன் கீழ் நீதிமன்றத்தில் மனு செய்து கொண்டு, பட்டம் பெறாதவர் கூட, நியாயமான யாருக்காகவும் வாதிடலாம். நமக்கு நாமே வாதாடுவதற்கு மனு செய்ய வேண்டிய அவசியமேக் கிடையாது. ஏனெனில் அது நமது அடிப்படைப் பேச்சுரிமை, யாரும் இந்த உரிமையை மறுக்க முடியாது. (நன்றி-திரு வாரண்ட்பாலா கருத்துக்கள்)

மனு அமைப்பு :

நாம் வழக்கமாக மனு எழுதும் போது அனுப்புநர், பெறுநர் என எழுதுகிறோம் அதற்கு பதிலாக, மனுதாரர் எதிர் எதிர்மனுதாரர் முகவரியைக்  குறிப்பிட வேண்டும். Legal size பச்சை பேப்பரில் நீதிமன்ற ஸ்டாம்ப் தேவையான ரூபாய்க்கு ஒட்டி நீதிபதியிடம் தரவேண்டும்.

  இந்த பேப்பர் 2 ரூபாய்க்கு எல்லா ஜெராக்ஸ் கடைகளிலும் கிடைக்கும். தமிழில் கையால் எழுதித் தரலாம். சட்டப் பிரிவை குறிப்பிடுவது அவசியம். எதிர்தரப்பினர் தமிழில்தான் பதில் தரவேண்டும் என்றும், வழக்கு தகவல்களை விசாரணையின் எல்லா நேரத்திலும் தமிழில் மட்டும்தான் பேச வேண்டும் என்றும் " தமிழ் ஆட்சி மொழி சட்டம்" துணை கொண்டு அறிவுறுத்தலாம்.

  வாதுரை, வழக்குரை, பதிலுரை, எதிருரை, சத்தியப்பிரமாண வாக்குமூலம் எல்லாவற்றுக்கும் வடிவமைப்பு ஒரே மாதிரிதான். உள்ளடக்கம்மட்டும்  உரைக்கு ஏற்ற மாதிரி எழுதி, 2 நகல்களுடன் தர வேண்டும்.

முன்பக்கம் :


மாதிரி மனு :


திரு வாரண்ட் பாலா அவர்களின் புத்தகங்கள் :

திருWarrant Ba Law அவர்கள் எழுதிய 7 புத்தகங்கள் உள்ளன. அரைகுறையாகப் படிக்க வேண்டாம். முழுவதும், அவர் தெரிவித்துள்ள வரிசையில் படிக்கவும். எளிய தமிழில் உள்ளதால் சிறப்பு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3825 பொது நூலகங்களுக்கு இவரது புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப் பட்டுள்ளன.


இந்திய நடுவண் அரசின் சட்ட அமைச்சகம், இவரது சட்ட ஆராய்ச்சிப் புத்தககங்களுக்கு, நிதி உதவி அளித்து உள்ளதால், நமது நடுவண்அரசாங்கமே பொதுமக்கள் நீதி மன்றங்களில் தாமே வாதாடுவதற்கு பரிந்துரை செய்து, ஊக்கப் படுத்துகிறது என்று பொருள் கொள்ளலாம்.

திரு வாரண்ட் பாலா வாட்ஸ்அப் எண் - 09842909190.

பொதுமக்கள் எவரும், சரியாக செயல்படாத அரசாங்கத்தைக் கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்யலாம், அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்று மாண்புமிகு.உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

ஆயினும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். நாகரிகமான வார்த்தைகளைக் கடுமையான விதத்தில் பயன்படுத்துதல் சிறப்பு.

திரு வாரண்ட் பாலா அவர்களின் புத்தகங்கள் உட்பட, பொது நூலகங்களில் மேலும் நிறைய சட்டப் புத்தகங்கள் தமிழில் கிடைக்கின்றன. எந்தப் புத்தகத்தையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. சட்டப் பிரிவுகளை கைப்பேசி மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டால், மீண்டும் மீண்டும் படிக்க இயலும்.

உதவிகரமான  சில இணையதளங்கள் :

http://www.neethiyaithedy.org/p/welcomes-you.html?m=1

https://indiacode.nic.in

வழக்கின் விபரங்களை செல்போனில் அறிவதற்கு :

https://districts.ecourts.gov.in/tn

மேலும் ecourts app டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். வழக்கு விபரங்கள் அன்றே செயலியில் புதுப்பிக்கப்படும். ஏதேனும் குறுக்கு வழி சூழ்ச்சிகளுக்கு நீதிமன்ற ஊழியர்கள் அல்லது வழக்குரைஞர்கள் துணை போவதாக சந்தேகம் எழுந்தால்.., தகுந்த காரணங்கள் மற்றும் ஆதாரங்களைக் குறிப்பிட்டு, மாண்புமிகு. உயர்நீதிமன்றம்- சென்னைக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

 நியாயமா ன காரணங்கள் உடனுக்குடன் உயர்நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. அதே நாளில் நடவடிக்கை எடுக்கப் படுகின்றன. எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்த பதில் கடிதம், மின்னஞ்சல் மூலம் அனுப்பப் படுவது இல்லை. புகாரின் ஆதாரம் தேவையெனில் பதிவு அஞ்சலில் அனுப்புவதே சிறந்தது.

https://districts.ecourts.gov.in/madhubani/ecourts-services-mobile-application-android


இந்த ecourts இணையம் மற்றும் app ஏதேனும் ஒன்றில், வழக்கு எண்ணைப் பதிவு செய்து, வழக்கின் ஒவ்வொரு வாய்தாவிலும் என்ன நடந்தது, அடுத்து வாய்தா எப்போது என்ற விபரங்களை இருந்த இடத்திலேயே, எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். நீதிமன்ற அலுவலர் அல்லது வழக்குரைஞரிடம் தொங்க வேண்டிய அவசியம் இல்லை.

அல்லது, நீதிமன்ற நுழைவு வாயில்களில் நிறுவப்பட்டு உள்ள தொடுதிரைக் கணினி மூலம் இலவசமாகவேத் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் நியாயமானவராக இருந்து, தமிழில் பிழையில்லாமல் எழுவும், படிக்கவும் தெரிந்தவர் என்றால், உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுங்கள். பொய்யர்களை (Li(awy)ers) உங்கள் பணத்தையும் நியாயத்தையும் திருட நீங்களே அனுமதிக்காதீர்கள்.

முயற்சித்துப் பலன் பெறுங்கள். நீதி எங்கும் நிலைக்கட்டும்.

(புகைப்படங்களுக்காக கூகுள் தேடலுக்கு நன்றி)



Comments

  1. வாரண்ட் balaw வின் நூல்கள் அனைத்தும் படித்து பயன் பெறுங்கள் .நீங்களே வாதாடுங்கள், ஈன பிறவி ஆன பொய்யர், (lawyer)சேர்க்காதீர்கள்.நீ வாழ நீயே வாதாடு .

    ReplyDelete
    Replies
    1. ஆம்... அதுவே மிகச்சரியான செயல்.

      Delete
    2. நாம் கொடுக்கும் இடை மனுவுக்கும் இரண்டு நகல்கள் சேர்த்துக் கொடுக்க வேண்டுமா?

      Delete
    3. எத்தனை எதிர்மனுதாரர்கள் இருக்கின்றனரோ அத்தனை நகல்கள் தரவேண்டும்.

      Delete
  2. கடமை செய் பலன் கிடைக்கும் இந்த புத்தகம் இப்பொழுது கிடைக்குமா sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :